கஜா புயலால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு!

கஜா புயல் மற்றும் தொடர் மழை  காரணமாக சனிக்கிழமை நவம்பர் 24 ஆம்  நாள் நடைபெறவிருந்த  தமிழ்நாடு அரசுப் பணியாளர்த் தேர்வாணைய தேர்வினை ஒத்துவைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. 

கஜா புயல் பாதிப்பு, தொடர் மழை காரணமாக சனிக்கிழமை நடத்தப்பட இருந்த புள்ளியல் ஆய்வாளர் பணிக்கான தேர்வினை ஒத்து வைக்கப்படுகின்றது. இந்த தேர்வு  மீண்டும் எப்பொழுது என தேதி பின்னர் அறிவிக்கப்படும். 





கூட்டுறவுச் சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு நவம்பர் 21 இல்  டிஎன்பிஎஸ்சி தளத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் தற்பொழுது இதற்கான  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு நவம்பர் 28 வரை நீட்டிக்கப்படுகின்றது.  இளநிலை ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த் இறுதித் தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ளோர் வாய்பினை இழந்தவர்கள் மீண்டும் இந்த கால அவகாச நீட்டிப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளலாம். 


கஜாபுயலால் படிக்க முடியாதவர்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பானது தேர்வர்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

Post a Comment

0 Comments