எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு!

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் மகளிர், ஆதரவற்ற விதவையர்களுக்கு   வேலைவாய்ப்பு பெற  ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.



பணியின் பெயர்
அலுவலக உதவியாளர்
வயது வரம்பு
 18 வயது முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
அறிக்கையின்படி
சம்பளம்
ரூபாய் 15,700-50,000
பணியிடம்
சென்னை  


அம்பத்தூர் அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள அலுவலக  உதவியாளர்ப் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

இப்பணிகளுக்கு கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் வேலைவாய்ப்பு  பெற தகுதியுடையோர் ஆவார்கள். 

தகுதியும்  விருப்பமும் உள்ளவர்கள் சாதி, முன் அனுபவ  சான்று, வீட்டு முகவரி, போன்ற சுய விவரங்களுடன்  விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும் அடிப்படை சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அஞ்சலில் செலுத்த வேண்டும். அம்பத்தூர் அரசின் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகள் குரூப் டி தரத்திலானது. மாதம் ரூபாய்  15,700 முதல் ரூபாய் 50,000 வரை சம்பளம் பெறலாம். 

நவம்பர் 23, 2018 க்குள் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டும்.   விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

துணை இயக்குநர், 
முதல்வர் அரசினர்  தொழிற்பயிற்சி நிலையம், 
அம்பத்தூர், 
சென்னை- 600098, 
தொடர்பு எண்கள்: 044- 26252453

மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியின் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments