கேரள வெள்ளமும் கெட்டுப்போன மனித உள்ளமும!

சபரிமலை இந்து சமய வழிபாட்டு கோவில் கேரளா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெருநாடு என்ற கிராம பஞ்சாயத்தில் அமைத்துள்ளது.
இந்த கோவில் 18 மலையின் மேல் 1260  அடி நீளம் இருப்பில் (4,133) அடி கடல் மட்டத்தில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது. சுற்றி மலைகள் மற்றும் காடுகளால் சூழபட்டுள்ளது.


நடைதிறப்பு:
இக்கோவிலை சுற்றி உள்ள காடுகள் பூங்காவனம் என்று அழைக்கப்படும். இந்த மலைகள் சபரிமலை என அழைக்கப்படும். இத்தகைய மிக சிறப்புப்பெற்ற பெருமையாய் விளங்கும்  கோவில் ஐயப்பன் கோவில் ஆகும்.  கார்த்திகை மாதம் மற்றும் புரட்டாசி மாதம் மட்டுமே தினமும் கோவில் நடை திறந்திருக்கும் மற்ற தினங்களில் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும். மிக சிறப்பு பெற்றது வழிபாட்டு முறையையே பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து பல இடங்களில் இருந்து வந்து வழிபடுவார்கள்.

பாதைகள்:
பக்தர்கள் பெருவழி, சிறுவழி என்று இருப்பதையில் அவர்கள் வேண்டுதலுக்கு இணங்க பாதையில் பொடி நடையாக சென்று மலையின் மேல் சென்று பதினெட்டு படியின் மேல் அமர்ந்திருக்கும்  இருக்கும் ஐயப்பனை வழிபடுவார்கள்.
இக்கோவிலுக்கு பக்தர்கள் தமிழ்நாடு, கர்நாடகா என சுற்றி உள்ள வடமாநிலங்களில் இருந்து பெரும் அளவு மக்கள் வழிபாட்டிற்காக வருவார்கள். வருடத்திற்கு 45 முதல் 50 கோடி வரை பக்தர்கள் வருகிறார்கள். அத்தகையையே சிறப்பு பெற்று கோவில் வழிபாட்டு முறை படி பெண்கள் அங்கு அனுமதி கிடையாது. 50 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி உண்டு.

 பெண்களுக்கு தடை:
1941 அன்று திருவங்கூர் மகாராணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின் 1991 ஆம் ஆண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிபதிகளான  கு.பரிபூர்ணன் மற்றும் கு.பலநாராயண மூர்த்தி ஆகியோர் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு தீர்ப்பு வழங்கி பெண்கள் கோவிலுக்கு செல்ல தடை விதித்தது.

10 வயதுக்குள் உள்ள குழந்தைகள் மற்றும் வயதான பெண்கள் மட்டுமே செல்லாலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் 2018 அன்று இதை மறுபரிசீலனை செய்து நிதிமன்றம் பெண்களுக்கும் ஆண்கள் செல்லும் இடத்திற்கு சென்று வழிபட சம உரிமை உண்டு என்ற விதத்தில் பெண்களும் சென்று வழிபடலாம் என தீர்ப்பு அளித்தது.

கேரள பெரு வெள்ளம் பகடைக்காயான  ஐப்பன் கோவிலும்: 
சிறப்பு பெற்ற ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவது தடைசெய்யப்படுவது போன்ற சம்பவங்கள் சர்ச்சைகளும் நடந்திருக்க, 2018 கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பெரிய அளவு பாதிக்க பட்டது. இதில் ஐயப்பன் கோவிலும் பெரும் அளவு பாதிக்க பட்டது மாதத்தில் 5 நாட்கள் நடக்கும் பூஜையும் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

கேரளா மாநிலமே இச்சம்பவத்தால் பெரும் அளவு பாதிக்கப்பட்டு வெள்ளத்தால் பெரும் அவதிக்கு உண்டானது இதே இந்த வெள்ள பதிப்பில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று சிந்தித்து செயல்படுவது இன்றி இந்த இயற்கையால் ஏற்பட்ட வெள்ளத்தையும் பாதிப்பையும் பெண்களை சபரிமலைக்குள் அனுமதித்தால் தான் நடந்தது என ஒரு  தரப்பும் ஐயப்பனுக்கே வெள்ளத்தில் பாதுகாப்பில்லை என மறுத்தரப்பிலும் ஆளாளுக்கு கருத்துக்கள் தெரிவித்தனர்.

எரியும் நெருப்பில்  எண்ணெய் ஊற்றும் சமூக ஊடக போராளிகள்:
எரியும்  நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஐயப்பன் கோவில் பெண்கள் அனுமதிக்கும் விவகாரம், கோவில் மூழ்குகின்றதெனில் ஐயப்பனுக்கே பாதுகாப்பில்லை என்ற தொனியில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில்  வீண் சர்ச்சைகளை சமூக ஊடகப்  போராளிகள் நடத்தி வந்தனர் இது கொடுமையின் உச்சம் ஆகும். ஆனால் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் சமூக ஊடக மனிதர்களால் தேவையற்ற பிரிவினையும் சிக்கலும் பெருகுகின்றது.

நீரில் தத்தளிக்கும் மக்களை காக்கும் நோக்கம் இல்லை ஆனால்  இதனால் வெள்ளம், இதுதான் காரணம் என கருத்துக்களை பரப்பில்  பப்பிளிசிட்டி தேடும் மக்களால் மிகுந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இத்தகைய பாதிப்பு கேரளாவுக்கு ஏற்பட்டது என பல சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றனர்.
இச்சம்பவம் இயற்கையால் நடந்த ஒரு பாதிப்புக்கு  மனிதராகியே நாம் பல முகமூடிகளை போட்டு அதை பல எதேச்சையான சம்பவங்கள் உடன் சேர்த்து பேசி சர்ச்சைகளை கிளப்பி அதில் விளம்பரத்தை தேடி குளிர் காய்கிறோம் இத்தகைய இழிவு புத்தியுடன் செயல் படுவதை விட்டு  நல்ல எண்ணத்துடன்   இந்தநிலையில் இருந்து மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான நிலையை சுட்டி காட்டி அவர்கள் கோவிலுக்கு வருவதற்கு தடை கூறுவதை தவிர்த்து  சற்று சிந்தித்து பாருங்கள் ஆண்கள் பெண்கள் இருவரும் மனிதர்கள் உடலால் வேறுப்ட்டவர்கள் சமுதாயத்தால் சரிநிகர் தன்மை குறைக்கப்பட்டவர்கள் என்பது புரியும். நாம் வழிபடும் கடவுளால் அனைவரும்  படைக்க பட்டோம். ஆனால் பெண்களை மட்டும் அனுமதிக்க கூடாது என்று கடவுள் கூறினாரா இல்லை நாமே கதை கட்டி அப்படி ஒரு நிலையை உருவாக்கிவிட்டோம்.

 இயற்கை அரண்கள்:
பெண்களும் கடவுளால் படைக்கப்பட்ட இயற்கை அரண்கள் ஆவார்கள்.   இயற்கையும் கடவுளும் ஒன்றே இதை புரிந்து கொண்டு செயல்படுதல் நலம் கோவிலுக்குள் செல்வது, அனுமதிப்பது  அது வேறு நிலை. ஆனால் அதை வைத்து  ஏற்ப்பட்ட இயற்கை சீற்றத்திற்கு ஒரு காரணம் கட்டி ஊர் சுற்ற வைத்தப்பது நல்ல மனித தன்மைக்கு அழக்கல்ல.

பெண்கள் குறித்தும், இறைவன், இயற்கை என காரணங்கள்  கேரள வெள்ள நேரத்தில் புகழ் தேடும் படித்த முட்டாள்களை எண்ணி இந்த  தேசம் நொந்து கொல்கின்றது. ஆபத்தில் இருப்பவனுக்கு உதவிவில்லை என்றாலும் நல்லதே, ஆனால்  அவன் அடிப்பட்டது இதனால் தான் என எள்ளி நகையாடுவது கொடுமையிலும் கொடுமையான தருணம் இது கொட்டுப்போன மனித உள்ளத்தை காட்டுகின்றது. அதுவும் படித்த இளைஞர்கள் செய்வது சரியன்று. எதிர்கால தூண்களுக்கு ஒரு வேண்டு கோள் எதுவும் தவறில்லை என்ற எண்ணத்தில் எங்கே போகின்றோம் என  கண்முன் தெரியாமல் போனால் கடும் பாதாளம் தான் முடிவாகும்.

பொறுப்புணர்ச்சியோடு செயல்படுவோம் உதவுவோம் இல்லையே உபத்திரம் செய்யாமல் இருப்போம்.
WRITTEN BY YOUTH ICON: MANIKANDAN 

மேலும் படிக்க:
கேரளாவில் வெள்ளம் கெத்து காட்டி காத்து நிற்கும் இந்திய  ராணுவம்!

Post a Comment

0 Comments