60 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 2000 சிறப்பு நிதியுதவி- தமிழக அரசு !

கஜா புயல் தாக்கம், கடுமையான வறட்சி ஆகியவற்றை  கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டுக்கீழுள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். 

சிறப்பு நிதியுதவியாக இந்த ஆண்டில் 60  லட்சம் பேருக்கு  தலா ரூபாய்  2,000 அளிக்க முதல்வர்  அறிவித்திருந்தார். சிறப்பு நிதியுதவியாக இந்த ஆண்டில் மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.


சட்ட பேரவையில் விதி 110 இன் கீழ்  தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் காட்டிய வழியின்படி பயணிக்கலாம். 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடந்துவரும் தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக  செயல்படுத்தி வருகிறது. 

60 லட்சம் குடும்பங்கள் பல மாவட்டங்களில் கஜா புயல் தாக்கம் பருவமழை 
பொய்த்தது போன்ற காரணங்களால் ஏழை எளிய மக்கள் மிகவும்.  பாதிப்படைந்துள்ளனர்.  இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ஆண்டு தமிழக அசு நிதியுதவியாக ரூபாய் 2000  வழங்கும். 

விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள் மீன்பிடி விசியத்தறி, கைத்தறி, கட்டுமானத் தொழிலாளர்கள் சலவைத் தொழிலாளர்கள் மரம்  ஏறும் தொழிலாளர்கள் உப்பளத் தொழிலாளர்கள் மரம் ஏறும் தொழிலாளர்கள்  காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் துப்புரவு, மண்பாண்டத் தொழிலாளர்கள் கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத்  தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிப்பானது கிராமத்தில் வாழும் 35 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழை குட்ம்பங்கள் தலா 2 ஆயிரம்  சிறப்பு நிதியுதவி பெற் செய்யும். 

இதற்கென 1200 கோடி நிகழ் நிதியாண்டின் துணை மானியக்  கோரிகையில் நிது ஒதுக்கீடு செய்யப்படும் என முதலவர் பழனிச்சாமி அறிவித்தார். 

தேர்தலுக்கு முன்பாக சிறப்பு நிதியுதவி அளிக்க நிதி ஒதுக்கீடு  நிகழ் நிதியாண்டிலியே செய்யப்படவுள்ளது. துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். 

சிறப்பு நிதியுதவி அளிப்பதற்கான நிதி ஒதுக்கீடு நிகழ்  நிகாழாண்டிலேயேர் செய்யப்படவுள்ளது. இதனால் மார்ச் மாதத்துக்குள்ளாக 60 லட்சம் பேருக்கும் தலா ரூ. 2 ஆயிரம் கிடைக்கும்.  தேர்தல் காலத்தில்  இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஆளும் அரசுக்கு  சாதகமாக இருக்குமா என்பதை பொருத்துதான் பார்க்க வேண்டும்.

இந்த தொகையானது உரிய கணக்கெடுப்புப் பிறகு அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், இதுகுறித்து  பிறப்பிக்கப்படும் அரசு உத்தரவில் அனைத்து விவரங்களுக்கும் தெரிவிக்கப்பட்ட உள்ளன. 

 5 ஏக்கருக்கு குறைவாக வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் அளிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இந்நிலையில் தமிழக அரசு அறவிப்பும் எவ்வாறு செயல்பட போகுது என பார்க்க வேண்டும்.

தமிழகத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள் சுமார் 70 லட்சம் பேர் நிகழ் நிதியாண்டின் மார்ச் மாதக்குள்ளாகக முதல் தவணைத் தொகையான  ரூபாய் 2 ஆயிரம் பெற உள்ளனர். 
தமிழகத்தைப் பொருத்துவரை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள தலா ரூபாய். 2 ஆயிரம் நிதியுதவியை சுமார் 1.3 கோடி குடும்பங்கள் பெற உள்ளன.
அரசு அறிவிப்புகள்: 
அரசு அறிவிப்புகள்  அனைத்தும் நலம் பயப்பதாகவே உள்ளது. ஆனால் அரசின் எந்த வாருமானத்தில் இவை அனைத்தையும் கொடுக்கவுள்ளனர். மேலும் இதனால் பயன் அடைவோர் எண்ணிக்கையில் உண்மையான தேவையுள்ளோரை சென்றடையுமா என்பதனை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

மேலும் அரசிலுள்ள துறைகளை வளப்படுத்தி  அந்தந்த துறைச்சார்ந்தவர்களிடம்  வேலை பெற்று தொகைகள் கொடுக்கலாம். மேலே குறிப்பிட்ட துறைச் சார்ந்தோரை உழைக்கச் செய்து அரசின் துறை மூலம் அதனை விற்பனை செய்ய்லாம்.

Post a Comment

0 Comments