போட்டித்தேர்வுக்கான மொழிப்பாட ஹைலைட்ஸ் பகுதி 7!

ஆகுபெயர்:
ஆகுபெயர் 6 வகைப்படும்
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு  தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகு பெயராகும்.

முதலாகுபெயர்:
மல்லிகை சூடினாள்
மல்லிகை என்பது முதற்பொருளாகிய கொடியைக் குறிக்காமல் பூ என்னும் சினையைக்குறிக்கிறது.

இடவாகுபெயர்:
பேச்சுப்போட்டியில் பூண்டி பள்ளிக்கு  முதலிடம். பள்ளி என்னும் இடப்பெயர் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆகி வருவது
   - இந்தியா தங்கம் வென்றது
   - ஊர் உறங்கியது
   -உடைந்து ஏரியைப் பார்க்க ஊரே திரண்டு வந்தது

காலவாகுபெயர்:
நீலா டிசம்பர் சூடி வந்தாள்.
டிசம்பர் என்னும் காலப்பெயர் மலருக்கு ஆகி வருவது


டிசம்பர் என்னும் காலப்பெயர் மலருக்கு ஆகி வருவது
  -சித்திரையான்
 - கார்த்திகை வந்தாள்

சினையாகுப் பெயர்:
வெற்றிலை நட்டான்
வெற்றிலை என்னும் உறுப்பு (சினை) இலையைக் குறிக்காமல் கொடிக்கு ஆகி வருவது ஆகும்.

குணவாகுப்பெயர் அல்லது பண்பாகுபெயர்:
வீட்டிற்கு வெள்ளை அடி
வெள்ளை என்னும் பண்புப்பெயர் தன்னைக் குறிக்காமல் சுண்ணாம்பைக் குறிக்கிறது.
            -நீலம் சூடினாள்

தொழிலாகுப்பெயர்:
பொங்கல் உண்டோம்
பொங்கல் என்பது பொங்குதலாகிய தொழிலைக் குறிக்காமல் உணவைக் குறிக்கிறது.

எண்ணல் அளவையாகுப்பெயர்: 
ஒன்று பெற்றால் ஒளிமயம்
ஓன்று என்னும் எண் தன்னைக் குறிக்காமல் குழந்தைகளுக்கு ஆகி வருவகிறது

எடுத்தல் அளவையாகுப் பெயர்:
ஐந்து கிலோ என்ன விலை?
கிலோ என்னும் எடுத்தல் அளவை ஏதோ ஒரு பொருளுக்கு  பரப்பு, சர்க்கரை,

முகத்தல்  அளவையாகுப்பெயர்:
மூன்று லிட்டர் கொடு, அரை லிட்டர் எவ்வளவு?
லிட்டர் என்னும் முகத்தல் அளவை பாலுக்கோ எண்ணெய்க்கோ அல்லது ஏதேனும் பொருளுக்கு ஆகி வருவது 

நீட்டல் அளவையாகுப்பெயர்:
உடுப்பது நான்கு முழம், நான்கு மீட்டர்  கொடு மீட்டர், முழம்  என்ற நீட்டல் அளவைகள் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புய துணிக்கி ஆகிவருகிறது.

சொல்லாகுப்பெயர்:
வள்ளுவன் சொல் வாழ்க்கைக்கு இனிது
தம்பி என் சொல் கேட்பான்

கருவியாகுப்பெய்ர:
யாழ் கேட்டு மகிழ்ந்தான் 
குழல் கேட்டு மகிழ்ந்தான்
பறையைக் கேட்டு ஆடினான்

யாழ், குழல், பறை போன்ற கருவிகள் தன்னைக் குறிக்காமல் தன்னால்
எழும் இசைக்கு ஆகிவருகிறது

காரியவாகுப்பெயர்:
அவர் கம்பலைக் கற்றவர்
அவன் வள்ளுவனைப் படித்தவன்
வள்ளுவனைப் படி

கம்பன் வள்ளுவன்  என்னும் கருத்தாவின் பெயர்கள் அவர்கள் இயற்றிய நூலுக்கு ஆகிவருகிறது.

உவமையாகுப் பெயர்:
நாரதர் வருகிறார்
பாவை ஆடினள்
நாரதர்  என்பது கலகமூட்டுபவரையும் பாவை என்பது பெண்ணுக்கும் உவமையாகி வருவதால் உவமையாகு பெயராகும்.

தானியாகுபெயர்:
பாலை இறக்கு
பாலை ஏற்று

பால் என்னும் பொருள் இடத்திற்கு ஆகிவருவது தானியாகு பெயர் ஆகும்.

 இடம் பொருளுக்கு ஆகி வருவது = இடவாகுப் பெயர்
பொருள் இடத்திற்கு ஆகிவருவது=  தானியாகு பெயர்

புணர்ச்சி:
இரண்டு அல்லது பல சொற்கள் இணைவது புணர்ச்சி ஆகும்.

இயல்புணர்ச்சி:
நிலைமொழியும், வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாகப் புணர்வதை இயல்பு  புணர்ச்சி என்பர்.

எ.கா:
வாழை + மரம்= வாழைமரம்
பொன்+ வளையல= பொன்வளையல்
மலர்+மாலை= மலர்மாலை
பனை+ மரம் = பனைமரம்

முதல்மொழி- நிலைமொழி:
 நிலைமொழியின் இறுதி எழுத்து மெயெழுத்தாக இருந்தால் மெய்யீறு என்று கூற வேண்டும். உயிர்மெய்யாக இருந்தால் உயிரீறு என்று சொல்ல வேண்டும். 

வருமொழியின் முதலெழுத்து   உயிர்மெய்யாக இருத்தல் மெய்முதல் என்றும்,உயிராக இருந்தால் உயிர்முதல் என்றும் கூற வேண்டு. 
பொன்+ வளையல்= ன் மெய்யீறு
பனை+ மரம்=  ன்+ஐ- உயிர் ஈறு
பொன்+ வளையல் = மெய் மதல் 
கண் + அழகு = அ- உயிர்முதல் 

நிலைமொழியும், வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அது விகாரப்புணர்ச்சி என்பர்

விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும்: 
தோன்றல்- பலா+களை= பலாச்சுளை
கெடுதல்- மரம்+வேர்= மரவேர்
திரிதல்- பொன்+ சிலை+ பொற்சிலை

உயிரீற்றுப் புணர்ச்சி:
உயிரீற்றுப் புணர்ச்சி:
உயிரீற்றுச் சொல்முன் வல்லின் எழுத்துக்கள் வந்தால் அதன் மெயெழுத்து
மிகும்
எ.கா:
பலா+ சுளை= பலாச்சுளை
பனி+போர்= பனிப்போர்
தினை+துணை= தினைத்துணை

உடம்படுபெய்ப் புணர்ச்சி:
நிலைமொழியின் உயிரீறும், வருமொழியின் உயிர்முதலும் சேரும்பொழுது 'வ்' அல்லது 'ய்' எழுத்துக்கள் இடையில் தோன்றும் 'ய்' மற்றும் 'வ்'  போன்றவை  உடும்படுமெய்கள் ஆகும். 
இ,ஈ,ஐ ஆகியன முன் உயிர் வரின் 'ய்' தோன்றும்

கிளி+ அலகு= கிளி+ய்+அலகு= கிளியலகு
தீ+ய்+எரிகிறது= தீயெரிகிறது
பனை+ஓலை= பனை+ய்+ஓலை= பனையோலை

அ,ஆ, உ, ஊ, ஓ முன் உயிர்வரின் 'வ்' தோன்றும்
குண+ அழகி= குண+வ்+ஆழகி+ குணவழகி
திரு+ ஆரூர்+ திரு+வ்+ அழகி = பூவழகி
கோ+இல்+ கோ+வ்+இல்= கோவில்

'ஏ' முன் உயிர்வடின்  வ்,ய் இரண்டு வரும்.
தோ+ ஆரம்= தே+வ்+ஆம் = தேவாரம் 
அவனே+அரசன்= அவனேயரசன்

போட்டி தேர்வுக்கு மொழிப்பாடத்தின் அறிவு என்பது பறந்துப்பட இருக்க வேண்டும். அதனை அடுத்தடுத்து படித்து பயிற்சி செய்து தேர்வு மூலம் பரிசோதித்து எழுதும் பொழுது பயன்படுத்தி எழுதும் போது மொழிச்சுவை தெரியவரும். 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments