டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சியில் சப்இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மீன்பிடித்துறையில்  சப் இன்ஸ்பெகடர்  பதவிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6 ஆகும். 

பணியின் பெயர்
சப் இன்ஸ்பெக்டர்
வயது வரம்பு
வரம்பு இல்லை
கல்வித் தகுதி
மீன்வளத்துறை டிப்ளமோ
பணியிடங்கள் எண்ணிக்கை
6
சம்பளம்
ரூபாய் 35,900-1,13,500 வரை பெறலாம்
பணியிடம்
தமிழ்நாடு

மீன்பிடித்துறையில் டிப்ளமோ பாடம் படித்திருக்க வேண்டும். அல்லது  மெரைன் பிசரிஸ் துறையில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும. அல்லது தமிழக அரசின்   டெக்னிக்கல் தொழில் படிப்புகளில் ஒன்றான  மீன்வளத்துறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் மீன்பிடித்துறை அறிவியல் பாடத்தில் இளங்கலை பட்டமவாது பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 

வயது வரம்பு ஏதும் இல்லை. மேலும் மாதச் சம்பளமாக ரூபாய் 35, 900 முதல் 1,13,500 பெறலாம். 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மீன்வளத்துறைத்துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 150 செலுத்த விண்ணப்பிக்க வேண்டும். 

அறிவிக்கையை முழுவதுமாக இரண்டு முறை படிக்க வேண்டும்,. ஆன்லைனில் விண்ணப்பங்களை  முறையாக பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். மேலும் தேவைப்படும் சான்றிதழ்களை இணைக்க வேண்டிய அவசியம் இருப்பின் அதனை தயார் செய்து விண்ணப்பிக்கவும். 

பிப்ரவரி 12, 2019 ஆம் தேதி விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

ஏப்ரல் 5, 2019 அன்று எழுத்து தேர்வாகும். 



மேலும் படிக்க:

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுவேலை வாய்ப்பு!

Post a Comment

0 Comments