பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தொழிலாளர் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் வேலைவாய்ப்பு பெற  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

கட்டுமானத்துறையில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 177 ஆகும். 



தமிழ்நாட்டில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைமையின் கீழ் எல்லா மாவட்டங்களும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களிலும்  தேவைப்படும் ஆட்களை பணியிலமர்த்த விண்ணப்பங்கள் மூலம் ஆட்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

பணியிட விவரங்கள்: 
இளநிலை உதவியாளர்   பணியிடங்கள் மொத்தம் 66 ஆகும்
கணினி பணியாளர் 111 ஆகும் 

பணியின் பெயர்
ஜூனியர்  அஸிஸ்டெண்ட், கணினி ஆப்ரேட்டர்
வயது வரம்பு
 18 வயதுமுதல் 30 வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
766
சம்பளம்
ரூபாய் 19,500 முதல் 62,0000
பணியிடம்
தமிழ்நாடு   முழுவதும்


கல்வித்தகுதி: 
கட்டுமானத்துறையில் பணிவாய்ப்பு பெற இளநிலை உதவியாளர் பணிக்கு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கணினி  இயக்குபவர் பணிக்கு பத்தாம் வகுப்புடன் கணினி பயின்றிருக்க வேண்டும் அது தொடர்பான படிப்பு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய   வேண்டும். 

விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும் மேலும் 30 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 
சம்பள தொகையாக  மாதம்  ரூபாய் 19,500 முதல் 62,000 வரை பெறலாம். 

தேர்வு முறை: 
பத்தாம்  வகுப்பு   பாடத் தரத்தில் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இணைய தளத்தில் வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரங்கள் பெறலாம். 

விண்ணப்ப கட்டணம்: 
தமிழ்நாடு கட்டுமானத்துறையில்  பணிவாய்ப்பு பெற ரூபாய் 100 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். அதனை டிடி முறையில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பத்தை முழுமையாக அடிப்படை விவரங்களுடன் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய தகவல்களை முறையாக கொடுத்து அவற்றின் சான்றிதழ்களை நகல்களுடன் இணைத்து புகைப்படத்துடன் இணைக்க வேண்டும். அவற்றை அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம். 

முகவரி: 
செயலாளர், 
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 
8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கபாக்கம், 
சென்னை - 600034

மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் டிடியை தி செக்ரட்டரி The Secretary, TNCWWB  என்ற பெயரில் சென்னையில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவம்பர் 2, 2018 மாலை 5.45 ஆகும் .




 
 மேலும் படிக்க:

ஜாயிண்ட் எம்பிளாய்மெண்டில் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு செய்திகள் படிக்க

Post a Comment

0 Comments