நான் விரும்பும் ஆண் மகன்!

வேத காலம் முதல் இன்றைய அதிவேக காலம் வரை
எங்களுக்கென்று விருப்பங்ள் உண்டு ..
பச்சை புல்வெளிகள் ரசிப்பது முதல் பார்லிமென்டில்
தலைஎடுக்கும் எண்ணம் வரை, தடங்கள் ஆயிரம் உண்டு
எங்களுக்குள்….

ஏனோ தெரியவில்லை இதுவரை எங்களின் விருப்பங்களை,,
 எல்லாம் புதைத்து கொண்டோம்…
இது “பெண்ணியம் அல்ல ஒரு பெண்ணின் இதயம்”...
நான் விரும்பும் ஆண்மகன் என்னை ஒரு சக உயிரினமாக கருத வேண்டும்
என் உணர்விற்க்கு மரியாதை தர வேண்டும்...
அழகை தாண்டி என்னிடமிருக்கும் அறிவுக்கு முக்கியத்துவம் தர
வேண்டும்...
அடுப்படிகலைகளை ஒரு நாளும் விட்டுதரமாட்டேன் ஆனால் எனக்கு அரசாளும்,,
தகுதியும் உண்டு என்பதை அறிந்து என் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்…
ஆண் மகனான உன்னை மீறிய உலகம் எனக்கும் உண்டு,,
அதர்க்காக நான் உன்னை உதாசினம் செய்கின்றேன் என்ற உள்அர்த்தம் கொள்ள வேண்டாம்..
உன் குடும்பத்தை தனித்து பிரிக்கும் அதிகாரம் எனக்கில்லை; ஆனால் என்னை உன் குடும்பத்தில்
இருந்து பிரித்து பார்கிறார்களா என்பதை அறியும் சக்தி உன்னிடம் இருத்தல் நலம்.
கார்,, சம்பாத்தியம், சொகுசு வாழ்க்கை,,, நகை,,, பங்களா,,, இவ்வஃறிணையை விட
உன்னிடம் இருந்து வரும் உயிர்ப்புள்ள புன்னகைக்காகத்தான்
நான் எப்போதும் காத்து கிடப்பேன் என்பதை நினைவில் கொள்..
உனக்கும் எனக்கும் ஆண் பெண் என்ற வேறுபாடு தவிற வேரெந்த வேற்றுமையையும்
என்னிடம் காட்டாதே…
வாழ்வென்னும் ஆலயத்தில் வருபது போவது ஆயிரம் இருக்கும் அன்போடு
அனுசரித்து போக மறவாதே,,,

கருத்து வேறுபாடு எதுவானாலும் அனுசரித்து இறங்க நான் தயார் ஆனால்,,,,
என்னை அடிமையாக்கும் எண்ணம் வளர்க்காதே…
நவநாகரீக மங்கையானாலும் நன்னடத்தையோடு வளர்க்கப்பட்டவள் நான்
என்பதை உணர்ந்து,, உள்ளார்ந்த என் இதய உணர்வுக்கு மதிப்புகொடு..
உனக்கு சொந்தமானவள் என்பதால் ஊருக்கும் அதில் நான் ஆற்றும் சேவைக்கும்
இருக்கும் தொடர்பை துண்டிக்க நினைக்கதே..
குடும்பபொறுப்பும்,,, இந்த நாட்டு பொறுப்பும் சுமக்க நான் தயார்…
சுதந்திரம் கொடு
நான் தொடுவதற்கெல்லாம் தோள் கொடு
நல்ல தோழனாய் இரு,,,
நான் தோற்றுபொகும்போதெல்லாம் என்னை எனக்கு தேடிக்கொடு ..
நான் விரும்பபோகும் உன்னிடம் இருந்து நான் வேண்டுவதெல்லாம் உன்
அன்பும்…!
நான் நானாக இருக்க நீ கொடுக்கும் அங்கிகாரம் மட்டும்தான்..
உன்னை அடக்கியாளும் ஆசை எனக்கில்லை அதேபோல்
என்னை அடக்கியாளும் உரிமையும் உனக்கில்லை.
அதற்க்காக நான் ஆதிக்கம் செய்பவள் என்ற அர்த்தம் இல்லை ..
எனக்கென்று தனிப்பட்ட ஆசைகள் எதுவுமில்லை..

எதுவானாலும் என்னை தூக்கி வளர்த்த இந்த தேசத்துக்கும் உனக்கும் செய்ய வேண்டிய
கடமை மட்டுமே உண்டு,
உணர்ந்துகொள்,,,,
உணர்வுக்கு மதிப்புக்கொடு,,,
தொடர்ந்து என்னோடு இரு ,,
என்னை தொலைத்துவிடாதே ,,
அப்படியே
எனக்கான நீ எங்கிருகிறாய்!!!!!...
என்பதையும் அறிவித்து விடு!!!! …
இப்படிக்கு நான்
புதுயுக மங்கை அல்ல ;
புதிதாய் என்னை மாற்றிக்கொண்டவள்..

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments